Posts

Showing posts from January 19, 2018

கானலில் காணாமல் போகையில்

பகலின் மத்திமத்தில் கடந்து சென்று கொண்டிருந்தேன் கானல்களை ஒவ்வொன்றாக. எல்லையற்றுக் கிடந்த அதன் விளிம்பினை எட்டிவிடும் முனைப்பில் உணர்வற்று கரைந்து கொண்டிருந்தேன் கானலுக்குள். இப்போது பகல் கரைந்து விட்டிருந்தது காணாமல் போயிருந்த என்னை கடந்து போய்க் கொண்டிருந்தது கானல் ஒன்று.