Posts

Showing posts from December 4, 2023

கடைசி விவசாயி - ஒரு பண்பாட்டின் மழைப்பாடல்!

Image
இந்தப்படத்தை எடுப்பதற்கெல்லாம் பெரும் துணிச்சல் வேண்டும் என்ற மொண்ணைத்தனமான பாராட்டை இயக்குனருக்கு அளித்தால் அது தான் இந்தப் படைப்புக்கு செய்யும் முதல் இழுக்கு. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என பிறிதொன்றிலாத படைப்பூக்கம் மிகுந்த படங்களின் வழியாக தமிழ் திரையுலகில் முட்களின் நடுவே ஒரு ஒற்றையடிப்பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார் மணிகண்டன். அந்தப்பாதை அவருக்களித்த தன்னிகரில்லா தன்னம்பிக்கையும், தமிழ்த்திரையுலகில் விரிந்து கிடக்கும் தார்ச்சாலைகள் ஏற்படுத்திய சலிப்பினாலும், மலினங்களினாலும் அவர் கடைசி விவசாயியை படைத்திருக்கிறார். அந்த ஒற்றையடிப்பாதையின் முன் நீண்டு கிடக்கும் ஒரு நெடுங்கோட்டை வரைந்து அந்த பாதையின் போக்குக்கு ஒளி படர்த்தியவர் பாலுமகேந்திரா. இப்போது இந்த படத்தின் வழியாக அந்த கோட்டை மணிகண்டன் தொட்டு விட்டார் என்றே உணர்கிறேன். கடைசி விவசாயி ஒரு பண்பாட்டின் விழுமியங்களை தளராமல் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் முனகல். அந்தப் பண்பாட்டின் மனிதர்கள் இன்றி, அவர்களின் பூமி இன்றி, அவர்களின் வாழ்க்கை இன்றி இந்தப்படைப்பு சாத்தியமில்லை. படத்தில் எனக்கு தாளாத பிரமிப்பை ஏ...

கொரோனா - நன்றியும், வேண்டுதலும்!

Image
கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து அது குறித்த அச்சமே நம்மை பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகவும் அமைந்திருந்தது. மாஸ்க், தனி மனித இடைவெளி, சானிடைசிங், கபசுர குடிநீர் என கடந்த ஆண்டு முழுவதும் மூளைக்குள் புகுத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை உணர்வு அதிக பாதுகாப்பு ஊக்கங்களுடன் இயங்க வைத்தது. அவ்வப்போது அறிகுறிகள் தென்பட்டாலும், கபசுர குடிநீர் உள்ளிட்டவை அளித்த நோய் எதிர்ப்புச் சக்திகள் காப்பாற்றின. முதல் அலை சற்று ஓய்ந்தவுடன் துவங்கிய தேர்தல் பணிகளில் அந்த பாதுகாப்பு உணர்வு சற்று மழுங்க துவங்கியது. முக கவசம் அணிவதில் கவனம் இருந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த கவனமின்மை காரணமாக இப்போது கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏப்.7 - 9 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து வாயிலாக சென்னைக்கு சென்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த பயணத்தின் போது தான் தொற்று தாக்கியிருக்க வேண்டும் என கருதுகிறேன். ஏப்.12 பிற்பகலில் உடல் வலி, காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் தென்பட்டன. வெயில் காரணமாக அவை இருக்கலாம் என கருதிய நிலையில், ஏப்.13 அன்று சுவை, மணம் உணர முடியாமை, வயிற்றுப் போக்கு உள்ளிட்டவை அத...

நினைவுக்கு இரையாதல்

அது என்னை பின்தொடர்ந்து வருவது எனக்கு தெரியாமலில்லை அதன் காலசைவின் ஒவ்வொரு அதிர்வையும் நான் உணராமலில்லை அதன் வெம்மை பொதிந்த மூச்சு என்னை தீண்டாமலில்லை இருந்தும் நான் கண்டும் காணாதது போல பாந்தமாய் என் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது என் மீது பாய்ந்தால் என்னால் தப்பிக்கவே முடியாதென தெரிந்தும் அது வெறுமே இலைகளின் மறைவில் நின்று என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது நீளும் அந்த பின்தொடரல் நாடகத்தை உள்ளூர ரசித்தவாறே வானை அண்ணாந்து பார்த்து இளைப்பாறிக் கொண்டிருக்கையில் நிலமதிர என் கழுத்தைக் கவ்வுகிறது வேட்டையாடப்பட்ட மிருகம் ஒன்று அந்த வேட்டைக்கு காத்திருப்பதும் தன் உயிர் உறிஞ்சப்படுவதை அது ரசித்து அனுபவிப்பதும் நிகழ்கிறது நினைவின் கணங்களில்!