Posts

Showing posts from November 6, 2017

படுக்கையின் பாதி

பெரும்பாலும் தொந்தரவு செய்வது நீயல்ல உனக்காக நான் ஒதுக்கியிருக்கும் என் படுக்கையின் பாதி தான்.

கண்ணாடி கண்கள்

எப்போதோ எழுதிய கவிதையின் மூன்றாவது வரியை படிக்கையில் நானாக சிரித்தேன். யாரோ என்னை பார்ப்பது போலிருந்தது திரும்பிப் பார்த்தேன் ஜன்னலும் வாசலும் கூட சாத்தியிருந்தன. மேசையின் மேல் விரித்து வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டினேன் பார்த்தேன். இப்போது பார்க்கவில்லை யாரும்.