ஓவியன் வீட்டிற்குள் நுழைந்து விட்ட திருடன் ஆத்திரத்தில் வண்ணத்தை எல்லாம் எட்டி உதைத்துக் கொட்டி கோபம் கழித்துச் சென்றிருந்தான் அவனுக்கே தெரியாமல் ஒரு ஓவியத்தையும் விட்டு விட்டு.
எந்த சோகத்தையோ எதன் சிரிப்பாலோ மறைக்கும் முயற்சியின் முடிவில் எதுவும் மறைக்கவில்லை எதுவும் மறையவில்லை அப்படியே தான் இருந்தன எல்லாமும், முதல்முறையாக இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கும் வரை.