Posts

Showing posts from January 30, 2018

உதட்டை என்ன செய்வாய்

அது சரி, உள்ளத்தை ஏதேனும் செய்து விடுவாய் தான். உதட்டை?! அதில் தோய்ந்து ஞிமிறென இன்புற்று இழைந்த என்னுதட்டின்ச் சூட்டை, குளிரை, இதத்தை? முடிந்தால் அதிலொன்றை தந்து விட்டு எங்கேனும் தொலைந்து போ.

தீரா தீர்தல்

எங்கே நீ விட்டுச் சென்றாயோ அங்கேயே அப்படியே கிடக்கிறது நம் வாழ்வு. என் பார்வையின் விளிம்பில் கிடந்து தத்தளிக்கின்றது. அதற்கெந்த பிரத்யேக சேதமும் ஏற்பட்டுவிட வேண்டாமென்கிற கவனம் ஒருபுறம். அதை வாரி அள்ளி மார்போடு சாய்த்து அதன் படபடப்பை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்கிற அக்கறை மறுபுறம். அகம்புறமாய் இரு நிலைகளும் என் நிலையை நான் தேடும் நிலைக்குள்ளாக்கும் பலமுடையவை. அதுதான் பயம். பேய், பூச்சி என்றால் ஏதேனும் சரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இது சகலமும் சரணமடைதல் அல்லவா. ஆதலால் இப்போது செய்வதறியா நிலை. எந்த நிலையிலும் இந்த நிலை வேண்டாமென்று தான் நினைத்தேன். வேண்டும் வேண்டாமென்பது பற்றி நினைவிற்கென்ன தெரியும். ஆக, அந்த வாழ்வின் மீது உனக்கென்ன கரிசனம் இருக்கும் இருக்காதென்பதை பற்றி எனக்குத் தேவையில்லை. தேவையெல்லாம் தீராக்கணக்கின் தீர்வு மட்டுமே. தீர்வதற்கு இது வெறும் கணக்கல்ல வாழ்வு. அது தீராதது. தீரா தீர்தல் தான் நம் தீர்வு.

எப்படி பிரியலாம்

எப்படித் தொடங்கி எப்படி முடிப்பது? எப்படித் தொடங்கினாலும் எப்படி முடித்தாலும் எழப்போகிற கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை எப்படியும். ஆதலால் ஒரு எழாத கேள்வி, நமக்குள் கேட்டாலும் தர முடியாத தந்தாலும் ஏற்க முடியாத ஏற்றாலும் அனுபவிக்க முடியாத அனுபவித்தாலும் நினைக்க முடியாத நினைத்தாலும் மறக்க முடியாத ஏதோ ஒன்று இனி இருக்கலாம் அல்லவா?! இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருக்கலாம் தான், என்ன செய்வது இருந்து தொலைத்து விட்டோம். இனி நாம் நினைத்தாலும் அது முடியாது. உண்மை என்னவென்றால் நம்மால் நினைக்கவே முடியாது ஏனெனில் நினைக்க நிகழ்ந்ததெல்லாம் நாம் நினைக்காதது தான். ஆதலால் இப்போது கடைசியாக ஒன்றே ஒன்றை நினைக்கிறேன், நாம் எப்படிப் பிரியலாமென்று. இதற்குக் கூட பதில் தெரியாது உனக்கு தெரிந்தாலும் நீ சொல்லப் போவதில்லை. நானே சொல்கிறேன் இன்னொரு முறை பார்ப்போம் இன்னொரு முறை சிரிப்போம் இன்னொரு முறை அழுவோம் இன்னொரு முறை கைகுலுக்குவோம் இன்னொரு முறை திட்டிக் கொள்வோம் இன்னொரு முறை கட்டிக்கொள்வோம் இன்னொரு முறை முத்தமிடுவோம் இன்னொரு ம...