உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...

‘நான் ஒரு சோழன்’ – இது உடையார் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம். உண்மையில் அது புதியது அல்ல. மிகமிகப் பழையது. ‘பொன்னியின் செல்வனையோ, உடையாரையோ படிக்கும் ஒவ்வொருவருக்கும் சோழ தேசத்தோடு ஜென்மாந்திர பந்தம் இருக்கும்’ – இது உடையார் முன்னுரையில் ஒரு வாசகர் சொன்னது. இவை மிகச் சத்தியமான வார்த்தைகள். ஒரு சத்தியமான வாழ்க்கை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சத்தியமான வார்த்தைகளையும் தானாகவே தேடிக்கொள்ளும் என்பது ‘உடையார்’ வரையில் மிகவும் பொருந்தி விட்டது. ‘என்னுடைய 237 நாவல்களும் உடையார் நாவலுக்கான பயிற்சி’ – இது எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சொன்னது. இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, ‘என் 14 ஆண்டு கால வாசிப்பும் உடையாருக்கான பயிற்சி’ என்பதும். உடையார் – சோழதேசத்தின் வாழ்வையும், ராஜராஜ சோழனின் வாழ்வையும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் வாழ்வையும், மிக நெருக்கமாக அனுபவித்து ஒரு சோழனாகவே வாழ்வதற்கான வாய்ப்பு. வாய்ப்பு என்று சொல்வது தவறு; அது பாக்கியம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்... பாண்டிய தேசம் முரட்டு வீரத்தாலும், சேர தேசம் அந்தணர்களின் தந்திரத்தாலும் தட்டுத் த...