Posts

Showing posts from September, 2018

நடந்து செல்லும் நீரூற்று

Image
தன் முதலிரவில் சம்பிரதாயமாக மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவன் அவன்; தனக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் வாங்கி இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு கொடுத்து விட்டவன்; தன் குழந்தையின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாமல் திணறியவன்; அந்தக் குழந்தை இறந்த போது அழுவதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன்; அவன் வைத்திருக்கும் ஜவுளிக்கடைக்கு வரும் பெண்கள் யாராவது தற்செயலாக அவனை உரசினாலோ, இல்லை அவன் முன்பாகவே ஜாக்கெட் ஊக்குகளை கழற்றி மார்பு தெரிய குழந்தைக்கு பால் கொடுத்தாலா கூட எந்தச் சலனமும் இல்லாதிருந்தவன்; தன் வாழ்வு முழுவதையும் வெறுமைக்கு தின்னக் கொடுத்து விட்டவன். தனக்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும், அது முழுக்க தீர்க்க முடியாத வெறுமையும் துக்கமும் நிரம்பி இருப்பதாகவும் நினைத்துக் கொண்டிந்தவன். அன்று – ஒரு நாள் முழுவதும் ஆட்டு மந்தையின் நாற்றத்திலும், இரவு முழுவதும் அதன் வெறுமையையும் அனுபவித்து விட்டு எழுந்து நடக்கையில் அவன் கால் இடறி தரையிலிருந்து ஒரு நீரூற்று வெளிப்படுகிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தையும், ஒருவித பரவசத்தையும் கொடுக்கிறது. கைகளால் நீரை வாங்கி ...

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...

Image
‘நான் ஒரு சோழன்’ – இது உடையார் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம். உண்மையில் அது புதியது அல்ல. மிகமிகப் பழையது. ‘பொன்னியின் செல்வனையோ, உடையாரையோ படிக்கும் ஒவ்வொருவருக்கும் சோழ தேசத்தோடு ஜென்மாந்திர பந்தம் இருக்கும்’ – இது உடையார் முன்னுரையில் ஒரு வாசகர் சொன்னது. இவை மிகச் சத்தியமான வார்த்தைகள். ஒரு சத்தியமான வாழ்க்கை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சத்தியமான வார்த்தைகளையும் தானாகவே தேடிக்கொள்ளும் என்பது ‘உடையார்’ வரையில் மிகவும் பொருந்தி விட்டது. ‘என்னுடைய 237 நாவல்களும் உடையார் நாவலுக்கான பயிற்சி’ – இது எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சொன்னது. இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, ‘என் 14 ஆண்டு கால வாசிப்பும் உடையாருக்கான பயிற்சி’ என்பதும். உடையார் – சோழதேசத்தின் வாழ்வையும், ராஜராஜ சோழனின் வாழ்வையும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் வாழ்வையும், மிக நெருக்கமாக அனுபவித்து ஒரு சோழனாகவே வாழ்வதற்கான வாய்ப்பு. வாய்ப்பு என்று சொல்வது தவறு; அது பாக்கியம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்... பாண்டிய தேசம் முரட்டு வீரத்தாலும், சேர தேசம் அந்தணர்களின் தந்திரத்தாலும் தட்டுத் த...