திருடனின் பரிசு

ஓவியன் வீட்டிற்குள்
நுழைந்து விட்ட
திருடன்
ஆத்திரத்தில்
வண்ணத்தை எல்லாம்
எட்டி உதைத்துக் கொட்டி
கோபம் கழித்துச்
சென்றிருந்தான்
அவனுக்கே தெரியாமல்
ஒரு
ஓவியத்தையும்
விட்டு விட்டு.


Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...