விஜய் எப்படி வென்றார்?
விஜய்க்கு வாக்களித்து அவரை வெல்ல வைத்தவர்களை முட்டாள்கள், அரசியல் அறியாமை கொண்டவர்கள் என்றெல்லாம் இப்போது பலர் சொல்கின்றனர். உண்மையில், முட்டாள்கள் என்பதால் அவர்கள் விஜய்க்கு வாக்களிக்கவில்லை, முட்டாளாக ஆக்கப்பட்டதால் வாக்களித்தவர்கள். விஜய் செல்லுமிடமெல்லாம் அவருக்கு கூடிய கூட்டத்தை முழுக்க நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன். மதுரை மாநாடு துவங்கி அவர் பிரச்சாரத்திற்கு சென்ற அத்தனை ஊர்களுக்கும் நேரில் சென்றிருக்கிறேன். கரூர் சம்பவ களத்தில் இருந்திருக்கிறேன். எந்த வரம்புகளுமற்ற, கட்டுப்பாடுகளுற்ற, பொறுப்புகளற்ற அந்தத் திரளின் பொதுப்பண்பை ஆரம்பத்தில் நானும் தவறாகவே முன்முடிவுகளுடன் அணுகினேன். அவர்கள் மிக மிக மேம்போக்கான வெறும் விஜயின் திரைக்கவர்ச்சியால் உள்ளிழுக்கப்பட்டவர்கள் என்றே நம்பினேன். ஆனால், கரூர் சம்பவத்திற்கு முன்பே திருச்சி, அரியலூர், நாகை மாவட்டங்களில் மிக நுட்பமாக சில விஷயங்களை கவனிக்க முடிந்தது. இளையோர் தரப்பிற்கு அப்பாற்பட்டு, விஜயை பார்க்க வந்த கூட்டத்தினுள் கணிசமாக எளிய பின்னணி கொண்ட உழைக்கும் பெண்கள், ஆண்கள் பங்கேற்றார்கள்....