நடந்து செல்லும் நீரூற்று

தன் முதலிரவில் சம்பிரதாயமாக மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவன் அவன்; தனக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் வாங்கி இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு கொடுத்து விட்டவன்; தன் குழந்தையின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாமல் திணறியவன்; அந்தக் குழந்தை இறந்த போது அழுவதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன்; அவன் வைத்திருக்கும் ஜவுளிக்கடைக்கு வரும் பெண்கள் யாராவது தற்செயலாக அவனை உரசினாலோ, இல்லை அவன் முன்பாகவே ஜாக்கெட் ஊக்குகளை கழற்றி மார்பு தெரிய குழந்தைக்கு பால் கொடுத்தாலா கூட எந்தச் சலனமும் இல்லாதிருந்தவன்; தன் வாழ்வு முழுவதையும் வெறுமைக்கு தின்னக் கொடுத்து விட்டவன். தனக்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும், அது முழுக்க தீர்க்க முடியாத வெறுமையும் துக்கமும் நிரம்பி இருப்பதாகவும் நினைத்துக் கொண்டிந்தவன். அன்று – ஒரு நாள் முழுவதும் ஆட்டு மந்தையின் நாற்றத்திலும், இரவு முழுவதும் அதன் வெறுமையையும் அனுபவித்து விட்டு எழுந்து நடக்கையில் அவன் கால் இடறி தரையிலிருந்து ஒரு நீரூற்று வெளிப்படுகிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தையும், ஒருவித பரவசத்தையும் கொடுக்கிறது. கைகளால் நீரை வாங்கி ...