தாலி கட்டும்போது நான் உளம்குழைந்து அழுதபடி வர்ஷினிக்கு நெற்றிமுத்தமிட்ட காட்சியை அவளுக்கு ஒப்பனையிட வந்த தோழி இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது பல லட்சம் பார்வையாளர்களை எட்டியது. யாரென்றே தெரியாத பல்லாயிரம் பேர் "நாங்களும் அழுதிட்டோம்... நீங்க நல்லாயிருக்கணும்..." என வியந்து கருத்திட்டிருந்தனர். உள்ளபடியே எனக்கு இது திகைப்பளித்தது. எளிய, ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்கள் உட்பட யாவருக்கும் தாலி கட்டும் தருணம் என்பது எப்படியும் சில நொடியேனும் உணர்ச்சிவயத்திற்குரிய ஒன்று தான். நானே நேரில் என் நண்பர்கள் சிலர் அப்படி கண் கலங்கியதை பார்த்திருக்கிறேன். எனில், எங்கள் வீடியோ ஏன் இவ்வளவு பரவி பாதித்தது? எங்களுடைய திருமண புகைப்படக்கலை நண்பர் சொன்னார், "கண்ணீரல்ல காரணம். '10 ஆண்டு காதல்' என்ற தலைப்பு தான். இன்றுள்ள காதலர்கள் பெரும்பாலோனோருக்கு இவ்வளவு காலம் காதலில் தொடர முடிவதில்லை” என. காதலில் தொடர்ச்சி என்பது உண்மையில் இவ்வளவு மதிப்புமிக்க ஒரு செயலா? நம் சமூகத்தின் பொதுப்பண்புகளால் அளவிடுகையில் காதல் இன்று அகமும் புறமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. ஆழ்மனதில் தொன்மம் போல நீட...
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. குடியையும், போதையையும், சாலைகளில் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுவதையும், சமூக வலையுலகில் அதிக லைக் வாங்குவதையும், கண்டபடி திண்பதையும், தியேட்டர் வாசலில் ஆடுவதையும், பயணம் போவதாக நினைத்து சுற்றுலா சென்று திரும்புவதையுமே மகிழ்ச்சி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அற்பங்கள், கீழான துள்ளல்கள், வெறும் அலட்டல்கள் என்று உணரவே முடியாத கவனச்சிதறல்கள் நிறைந்த தொலைவில் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக நம் குடும்பங்கள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சி என்பவை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை கால சிறிய அளவிலான கொண்டாட்டங்களே. அவற்றையும் கூட நேர விரயமாக நினைத்துக் கொண்டு படத்திற்கு போகின்றவர்களும், நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்து போட்டோ எடுத்து கழிப்பவர்களும் இருக்கிறார்கள். மேலான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அடிப்படையான மனப்பயிற்சியை நம் குடும்பங்கள் அளிப்பதில்லை. அரிதாகவே இலக்கியம், இசை உள்ளிட்ட கலைகள் வழியாக உயர்ந்த ரசனை வாய்க்கிறது. இதுபோன்ற உயர் இன்பங்களை அளிக்க நம் சராசரிக் குடும்பங்களுக்கு மரப...
என் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறியது. சோழர் கால ஆலயக்கலை மரபின் 170 ஆண்டுகால குறுக்குவெட்டு தோற்றத்தை ஒரே நாளில் கண்டேன். கி.பி. 1000ல் துவங்கி 1173 வரையில் பெரும் கலைக் கொடையென சோழப் பேரரசர்கள் நிர்மாணித்த தஞ்சைப் பெருவுடையார், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்களை தொடர்ச்சியாக பார்த்தறிந்தது என் முழு வாழ்வுக்குமான களிப்பின் பெருக்கு. 2017ல் பணியிடத்தில் எனக்கேற்பட்ட பெரும் அகச்சோர்விலிருந்து மீளும் பொருட்டு வெறிகொண்டு நான் வாசித்த நூல்களில் ஒன்று உடையார். 6 பாகங்களையும் கணினித்திரையிலேயே படித்து முடித்திருந்தேன். என் 22 வயதில் நான் வாசித்திருந்த முதல் பெரிய நூல் அது. பொன்னியின் செல்வனும், உடையாரும் சோழத்துடன் உணர வைக்கும் 'ஜென்மாந்திர பந்தம்' எனக்கு அன்று துவங்கியது. அதற்கு முன், 10 வயதில் பள்ளிச்சுற்றுலாவின் போது முதன்முறை சென்றிருந்த தஞ்சை வெறும் தலையாட்டி பொம்மையின் நினைவாக எஞ்சியிருந்தது. உடையாருக்கு பின் தான் அவ்விதை முளைத்தெழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது பெரும் பித்தென எனை ஆட்கொள்ளத் துவங்கியது. சோழம் ஒரு சுழலென சூழ்ந்திழுத்து, பெருவுடையார் குறித்த...
Comments